1920 ம் ஆண்டளவில் சாட்டி விதி வேலணை என்னும் முகவரியில்அரசமரத்தடியில் கீழாக வைரவர் சூலம் ஸ்தாபிக்கப்பட்ட நிலையில் எங்கள் ஊர்ச்சைவப் பெருமக்கள் வழிபாடு செய்து வந்தனர்
ஆலயமாகத் தோற்றம் பெற்றமை 1970ம் ஆண்டளவில் திரு. கந்தையா வேலுப்பிள்ளை எனும் அடியவரால் சிறு ஆலயம் ஒன்று தற்போது வைரவர் சூலம் காணப்படும் இடத்தில கட்டப்பட்டது. இவரது முயற்சியில் திரு. நாகலிங்கம் என்பவரும் திரு. அருணகிரி, திரு. தியாகராஜா ஆகிய வர்த்தக பெருமக்களும் பெரியதும் ஆதரவளித்தனர். சேது கண்ணையா உள்ளிட்ட வேறு சிலரின் பொருளுதவியும் உடல் உழைப்பும் மேலும் வலுச் சேர்ந்தது.
















